முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஆய்வை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்துகிறது

மத்திய கனிமவள புவியியல் சுரங்க அமைச்சகம் டங்ஸ்டன் சுரங்க ஆய்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வரவில்லை. ஆகவே தற்காலிகமாக நிறுத்துகிறது


அதேநேரம், சர்ச்சைக்குரிய பகுதியை தவிர்த்துவிட்டு, புதிதாக திட்ட வரைபடம் தயாரிக்கத் தான் மத்திய அரசு விரும்புகிறது என்று தெளிவாகத் தெரிகிறது   இந்த நிலையில்               மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவு நிலப்பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனத்திற்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்ந தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப் பகுதிகளில் ஒன்றான அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி ஆகும். அரிட்டாபட்டி , மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய ஸ்தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏழு சிறிய குன்றுகள் இதில் அடங்குகின்றன. இவை 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாகும். தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாகும். இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரைக் கோவில்கள் உள்ளன அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் அங்குள்ள பல்லுயிர் வாழிடங்களும், புராதனப் பெருமை மிக்க சின்னங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும் எனக் கூறி அப்பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த முயற்சிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவைக் கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவைக் கூட்டம் கூடிய நிலையில், டங்ஸ்டன் சுரங்கதிற்கு எதிரான தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்து சட்டசபையில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தீர்மானம் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு தற்போது பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக வெளியாகிய அறிவிப்பில்,” பொருளாதார வளர்ச்சிக்காக கனிமங்களை ஏலம் விடுவது மத்திய அரசின் கனிம வளத் துறையின் பணி. கூட்டு உரிமம், கனிமச் சுரங்கத்தை குத்தகைக்கு விட கையெழுத்திடுவது மாநில அரசால் செய்யப்படுகிற நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.பல்லுயிர் பகுதிகளை தவிர்த்து விட்டு மற்ற இடங்களை ஆய்வு செய்யலாம். கனிமச் சுரங்க ஏலம் விட பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்ததால் மறுபரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளஅதே நேரத்தில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலம் விடும் பணிகள் தொடங்கியது முதல் தமிழ்நாடு எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. டங்ஸ்டன் ஏலம் தொடர்பாக 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி முடிவை அறிவிக்கும் வரை தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்பு வரவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள டங்ஸ்டனுக்கான புவியியல் குறிப்பாணையை 2021 செப்டம்பரில் தமிழ்நாடு அரசிடம் GSI ஒப்படைத்த போது மாநில அரசு டங்ஸ்டன் போன்ற முக்கியமான கனிமங்கள் உட்பட அனைத்து முக்கிய கனிமங்களையும் ஏலம் விட அதிகாரம் பெற்றிருந்தது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957, 2023 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது, இது டங்ஸ்டன் உள்பட 'முக்கியமான மற்றும் மூலோபாய கனிமங்கள்' தொடர்பான சுரங்கக் குத்தகைகள் மற்றும் கலப்பு உரிமங்களை பிரத்தியேகமாக ஏலம் விடுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரமளித்தது.
இந்தத் திருத்தத்தின் அடிப்படையில், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதி உட்பட, மாநிலத்தில் உள்ள முக்கியமான கனிமத் தொகுதிகளை ஏலம் விடுவது குறித்து, சுரங்கத் துறை அமைச்சகம், செப்டம்பர் 2023 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால், இதற்கு பதிலளித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டம் குறித்து கேள்வி எழுப்பியதோடு, முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதற்கான அதிகாரமும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரினார்.“2021-2023 ஆம் ஆண்டில், முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதற்கு அரசுக்கு அதிகாரம் இருந்தபோது, ​​தமிழ்நாடு எதையும் செய்யவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உண்மையில், ஏலம் ஆட்சி வந்ததிலிருந்து, கடந்த ஒன்பது ஆண்டுகளாக தமிழ்நாடு ஒரு பெரிய கனிம வளத்தையும் ஏலம் விடவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...