உத்தரகாண்ட், இராஜஸ்தான் மாநிலத்தின் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நீதித்துறை அலுவலர்களை நியமிக்க உச்சநீதிமன்றத்தில் கொலீஜியம் பரிந்துரைக்கிறது,
உச்ச நீதிமன்ற கொலீஜியம், டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி, 2024 அன்று நடந்த கூட்டத்தில், நீதித்துறை அலுவலர் ஆஷிஷ் நைதானியை உத்தரகாண்ட் மாநிலத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது.
11 நீதிபதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், தற்போது 6 நீதிபதிகளுடன் மட்டுமே செயல்பட்டு வருகிறது, மேலும் 5 காலியிடங்களும் உள்ளன.
டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி, 2024 தேதியிட்ட அறிவிப்பில், “உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் 2024 டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று நடைபெற்ற கூட்டத்தில், நீதித்துறை அலுவலரான ஸ்ரீ ஆஷிஷ் நைதானியை உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.”
கூடுதலாக, கொலீஜியம் மூன்று நீதித்துறை அலுவலர்களை இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக உயர்த்தப் பரிந்துரைத்தது:
சந்திர சேகர் சர்மா, பிரமில் குமார் மாத்தூர், மற்றும். சந்திர பிரகாஷ் ஸ்ரீமாலி. ஆகும்
அனுமதிக்கப்பட்ட 50 நீதிபதிகளைக் கொண்ட இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தற்போது 32 நீதிபதிகளுடன் செயல்பட்டு வருவதால் 18 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது. இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் நடைபெற்ற அதே கூட்டத்தின் போது இந்தப் பரிந்துரைகளும் அளிக்கப்பட்டன.
டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி, 2024 அறிவிப்பில், “ உச்சநீதிமன்றத்தில் கொலீஜியம் 22 டிசம்பர் 2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில், பின்வரும் நீதித்துறை அலுவலர்களை இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது: அதில் (i) ஸ்ரீ சந்திர சேகர் சர்மா, (ii) ஸ்ரீ பிரமில் குமார் மாத்தூர், (iii)ஸ்ரீ சந்திர பிரகாஷ் ஸ்ரீமாலி." ஆகும்
கருத்துகள்