முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலித்த பெண்ணை ரயில் முன் தள்ளிக்கொன்றவனுக்கு மரண தண்டனை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

காதலித்த பெண்ணை ரயில் முன் தள்ளிக்கொன்றவனுக்கு மரண தண்டனை மகளிர் சிறப்பு நீதிமன்றம்  தீர்ப்பு


பெற்றோர் எதிர்ப்பு காரணமாக, காதலைக் கைவிட்ட காதலியை ரயில் முன் தள்ளிக் கொலை செய்த  சதீஷுக்கு என்பவனுக்கு மரண தண்டனை விதித்து, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

சென்னை ஆலந்துார் காவல்துறை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் மாணிக்கம். இவர் கார் வைத்து வாடகைக்கு ஓட்டிப்பிழைத்து வந்தார். அவர் மனைவி இராமலட்சுமி: ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்தவர்களது மூத்த மகள் சத்யா, (வயது 20); தியாகராயநகரிலுள்ள தனியார் கல்லுாரியில், பி.சி.ஏ., மூன்றாமாண்டு படித்து வந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை சார்பு ஆய்வாளர், தயாளன் மகன் சதீஷ், (வயது31), என்பவரை காதலித்துள்ளார்.

டிப்ளமோ படித்த சதீஷ். எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றியுள்ளார். அதன் காரணமாக, சதீஷை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என, சத்யாவை அவரது பெற்றோர் கண்டித்ததையடுத்து, சதீஷ் உடனான காதலை சத்யா கைவிட்டார்.


அதில் மனமுடைந்த சதீஷ், சத்யாவிடம் தன் காதலை ஏற்க போராடி முடியாத நிலையில், 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்., 13 ஆம் தேதியில் கல்லூரி செல்ல. பரங்கிமலை இரயில் நிலையத்தில் முதல் பிளாட்பார்மில் காத்திருந்த சத்யாவை சந்தித்தபோது காதலை ஏற்குமாறு அவரிடம் கூறவே பெற்றோர் அறி வுரையை மீற முடியாது என சத்யா சொன்னதும் ஆத்திரமடைந்த சதீஷ். அவ்வழியே வந்த ரயில் முன் சத்யாவை தள்ளி விட்டதில், படுகாயமடைந்த சத்யா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


அதையறிந்ததும்,  தாங்காமல் அன் று தினம், மாண வியின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மகள் கொலையான சில மணி நேரத்தில் தந்தை உயிரிழந்தது  சோகத்தை ஏற்படுத்திய

இந்தச் சம்பவம் தொடர்பாசு, கொலை வழக்குப் பதிவு செய்த மாம்பலம் ரயில்வே காவல்துறை சதீஷை கைது செய்தனர்.


தமிழகத்தில் பெரிதும் பேசப்பட்ட சத்யா கொலை வழக்கு, சி.பி.சி.ஐ.டி., காவல் துறைக்கு மாற்றப் பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சத்யாவின் தாய், மகள் இறந்த சோகத் தில் இருந்த நிலையில் அவரும் உயிரிழந்தார்.

கொலை, பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சி.பி.சி.ஐ.டி., காவலர்கள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

விசாரணை முடிந்த நிலையில், வழக்கின் விசா ரணை அலுவலரான சி.பி.சி.ஐ.டி., காவல் ஆய்வாளர் கே.ரம்யா, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்., 11 ஆம் தேதியில் சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் சதீஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

பின். கடந்தாண்டு மார்ச்சில் இந்த வழக்கு, சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன் றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி விசாரித்து வந்தார். அரசு தரப்பு சாட் சிகள், 70 பேரிடம் விசா ரணை நடத்தப்பட்டது.

காவல் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.எம்.ரவீந்திரநாத் ஜெயபால், "சதீஷ் மீதான குற்றச்சாட்டு கடுமையானது என்பதால், அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். என வாதிட்டார்.

வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில், சதீஷ் குற்றவாளி என்றும், அவருக்கான தண்டனை விப ரங்கள், டிசம்பர் மாதம்., 30 ஆம் தேதியில் அறிவிக்கப்படும் என்று டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியில் நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி அறிவித்தார். அதன்படி, நேற்று முன்தினம் தண்டனை விபரங்களை அறிவிக்க, வழக்கு பட்டியலிடப்பட்டது.

புழல் சிறையிலிருந்து குற்றவாளி சதீஷ் கூட்டி வரப்பட்டு மதியம் 1:20 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவரிடம் தண்டனை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு சதீஷ், குறைந்த தண்டனை வழங்க கேட்ட நிலையில் பெற்றோரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தனக்கு உடல் தலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  "இதையடுத்து, பிற் பகல் 3:30 மணிக்கு தண்டனை விபரத்தை, நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி அறிவித்தார்.CBCID - Central Crime Branch, காவல்துறை Chennai குற்ற FIR Cr Number 7 / 2022 ஆகப் பதிவு செய்யப்பட்ட நிலையில்,பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், சதீஷுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 10,000  ரூபாய் அபராதம் விதித்ததுடன்,

இந்திய தண்டனைச் சட்டம், 302 வது பிரிவின் கீழ் கொலை குற்றத்திற்கு மரண தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.

தீர்ப்பை கேட்ட தும் சதீஷ் கண்ணீர் விட்டார். பின், குற்றவாளி பலத்த காவல் துறை பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கூட்டிச் சென்றனர்.

குற்றவாளி சதீஷ் கைதானதிலிருந்து, தீர்ப்பு வரை சிறையில்  இருந்துள்ளார்

சம்பவம் நடந்து முடிந்து, மூன்று மாதங்களுக்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. விசாரணை துவங்கி ஓராண்டு எட்டு மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது.  சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.எம்.ரவீந்திரநாத் ஜெயபால்  செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

"இந்த வழக்கைப் பொறுத்தவரை, குற்றவாளி சதீஷ், ரயில் முன் சத்யாவைத் தள்ளிவிட்டது மட்டுமின்றி, அவர் இறந்து விட்டாரா என உறுதி செய்த பின், அங்கிருந்து தப்பியோடினார்  என்பது போன்ற சாட்சியங்கள், வழக்கில் அதிகபட்ச தண்டனை கிடைக்கப் பேருதவியாக இருந்தது.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடு படுவோருக்கு, இந்த வழக்கின் தீர்ப்பு, ஒரு பாடமாக இருக்கும். வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். குறிப்பாக, சாட்சிகள், குறுக்கு விசாரணை உள்ளிட்டவற்றை கவனமாகக் கையாண்டோம். அரிதிலும் அரி தாள் வழக்குகளில் தான், தாக்குத் தண்டனை விதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் படி, இந்த வழக்கில் குற்றவாளியான சதீஷுக்கு

நீதிபதி மரண தண்டனை விதித்துள்ளார்" எனக். கூறினார். இது போன்ற நிகழ்வுகள் நீதித்துறையின்  பேரில் நம்பிக்கையை வளர்க்கிறது. என்பது தான் இங்கு பொது நீதி, விரைவான மற்றும் சரியான நீதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மன நிறைவையும் குற்றங்களைச் செய்பவர்கள் மனதில் பயத்தையும் விதைக்கும் என்பதுதான் இதன் தாத்பரியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...