அவதூறு வழக்கில் கைதான ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் விடுதலை.
ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன். கோவில்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் பல வழக்குகளைத் தொடர்ந்து நடத்துகிறார். கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடுகிறார். சில நாட்களுக்கு முன், துணை முதல்வர் உதயநிதி வீட்டுக்கு வைணவ ஜீயர்கள் மூவர் சென்றதாகவும், அங்கு தோஷ நிவர்த்தி செய்ததாகவும் தகவலை வெளியிட்டார். அவரும், ஜீயரும் பேசிக் கொள்வது போல இருந்த அந்த ஆடியோ பரபரப்பானது.இந்த நிலையில், அவர் அவதூறு பரப்பியதாக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர், புகார் அளித்ததன் அடிப்படையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனைகா கைது செய்து. அவர் மீது அடுத்தடுத்து மொத்தம் ஏழு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அதில் அணைத்திலும் ஜாமின் பெற்ற நிலையில் இன்று காலை சென்னை மத்திய சிறையிலிருந்து விடுதலையானார்..
கருத்துகள்