முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தை மீது அவதூறு பரப்பிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் காத்திருக்கும் பட்டியலுக்கு மாற்றம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை பணியிடத்திலிருந்து காத்திருக்கும் பட்டியல் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மூன்றரை வயது சிறுமி அருகில் உள்ள அங்கன்வாடியில் பயின்ற நிலையில், மதிய உணவு இடைவேளையில் கை கழுவ வெளியே சென்ற குழந்தைக்கு அதே பகுதி வசிக்கும் 17 வயத நபர் பாலியல் தொல்லை கொடுத்த போது குழந்தை அலறியதால் செங்கல் எடுத்து தலையில் தாக்கியதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து முறையற்ற வகையில் பேசிய  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை உடனடியாக பணியிடத்திலிருந்து காத்திருக்கும் பட்டியல் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது சீர்காழியில் மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி, அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது. குழந்தை தவறாக நடந்ததும் பாலியல் துன்புறுத்தல் முயற்சிக்கு காரணம் எனக் கூறியது சமூகத்தின் முன்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட...

நீதிபதிகள் நியமனத்தில் சமூக சம வாய்ப்பு வழங்கக் கோரி சென்னை மற்றும் மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

நீதிபதிகள் நியமனத்தில் சமூக சம வாய்ப்பு வழங்கக் கோரி சென்னை மற்றும் மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து ஜாதி சார்ந்த சமூகத்தினருக்கும் உரியப் பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தின் சென்னை மற்றும் மதுரை அமர்வில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து ஜாதி சார்ந்த சமூகத்தினருக்கும் உரியப் பிரதிநிதித்துவம் வழங்கக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியா முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 33 சதவீத நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. இந்தப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதையடுத்து, நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து ஜாதி சார்ந்த சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீதிமன்றப் புறக்கணிப்பால் உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் வழக்கறிஞர்கள் அ...

சர்வதேச மாநாட்டில் இரண்டாவது பரிசை வென்ற மருத்துவ நிபுணர் டாக்டர் பி.சுஹாசினி

ஆயுஷ் என்பது இந்தியாவில் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளின் சுருக்கமாகும்.  சித்தா உட்பட அனைத்து இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் ஊக்குவிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - ஆயுஷ் துறையின் அமைச்சராக ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் உள்ளார்.  இந்த நிலையில்.  பி.எச்.டி. ஆய்வியல் அறிஞர், டாக்டர் பி. சுஹாசினி, தனது குறைந்த இரத்த அழுத்தம் நோய் தடுப்பு தொடர்பான சிறந்த விளக்கக்காட்சிக்காக சர்வதேச மாநாட்டில் இரண்டாவது பரிசை வென்றுள்ளார்  இவர் வழக்கறிஞர் மற்றும் சமூக சேவகர் புதுக்கோட்டை எஸ்.பழனிவேலு மகளாவார். இவரது மாமனார் மற்றும் கணவரும் சித்த மருத்துவம் சார்ந்த மருத்துவர்கள் தான் இந்த நிலையில்  "சித்த மருத்துவத்தின் மூலம் குறைந்த வெளியேற்ற பகுதியுடன் இதய செயலிழப்பை நிர்வகித்தல் - குறித்து ஒரு  அறிக்கை" தாக்கல் செய்தார். அவரது சாதனை குறித்து ஆயுஷ் துறையினர் பெருமிதம் கொள்வதாக, டாக்டர் சுஹாசினி சித்த மருத்துவத் துறையில் பிரகாசிக்கவும் முன்னேறவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.  ...

சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி நடிகர் இயக்குனர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.                      12 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்"  உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்த நிலையில்  தொடர்ந்து சீமான் மீதான வழக்கை காவல்துறை விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 15 பேர் விசாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாகச் சம்பந்தப்பட்ட நடிகை விஜயலட்சுமியிடம் 3 மணி நேரத்துக்கும்  மேலாக காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர். இதற்கிடையே நாளைய தினம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி வளசரவாக்கம் காவல்துறையினர் சீமானுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீமான் தரப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும்...