முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதலான ஜெ.ஜெயலலிதாவின் நகைகள், மற்றும் சொத்து ஆவணம் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகளுடன் 1,562 ஏக்கர் நில ஆவணங்களும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு. 

சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதலான ஜெ.ஜெயலலிதாவின் நகைகள், மற்றும் சொத்து ஆவணம் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

1991-96 ஆம் ஆண்டு காலத்தில் தமிழ்நாடு முதல்வராக இருந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா. வருமானத்துக்கு அதிகமாக ரூபாய்.66 கோடிக்கு சொத்து குவித்ததாக அப்போது முன்னாள் சட்ட அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி உயர்நீதிமன்றம் முலம் அனுமதி கோரி நீதியரசர் சீனிவாசன் அனுமதி வழங்க ஆளுநருக்கு உத்தரவிட்டு அப்போது ஆளுநர் டாக்டர் சென்னா ரெட்டியால் அனுமதி வழங்கப்பட்ட வழக்கு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மூலம் வழக்கு தொடரப்பட்டது பின்னர் அதில் துணைக் கண்காணிப்பாளர் நல்லம் நாயுடு மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது பின்னர் வழக்கு விசாரணை கர்நாடகா மாநிலத்துக்கு மாற்றப்பட்டது இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் 2014-ஆம் ஆண்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவால் தண்டனை வழங்கப்பட்டது செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய்.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.


அந்த நிலையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையினர் கைப்பற்றிய நகைகள், மற்றும் சொத்துகளை ஏலம் விட்டு, வழக்கை நடத்திய கர்நாடக அரசின் செலவு தொகையையும் அபராதமும் செலுத்த வேண்டும் வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். அதை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியது இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது. இந்த நிலையில்ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை விசாரித்த நிறுவனமான DVAC-யின் கண்காணிப்பாளருக்கு டி.நரசிம்ம மூர்த்தி கடிதம் எழுதி, மீதமுள்ள 28 பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் தாக்கல் செய்யுமாறு கோரிய மனு

டி.நரசிம்ம மூர்த்தி வழங்கிய இணைப்பின்படி, இந்தப் பொருட்களில் 700 கிலோ வெள்ளிப் பொருட்கள், 11,344 விலையுயர்ந்த புடவைகள், 44 ஏசி இயந்திரங்கள், 131 சூட்கேஸ்கள், 91 மணிக்கட்டு கடிகாரங்கள், 146 அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள், 750 அலங்கரிக்கப்பட்ட செருப்புகள், 215 படிக-வெட்டு கண்ணாடிகள், 12 குளிர்சாதன பெட்டிகள் மற்றும் 1,040 வீடியோ கேசட்டுகள் ஆகியவையும் அடங்கும். பெங்களூருவைச் சேர்ந்த நபரான நரசிம்ம மூர்த்தி செல்வி ஜெ.ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விட வேண் டும் என பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஹெச்.ஏ. மோகன், “நகைகள், புடவைகள், சொத்து ஆவணங்களை தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வழக்கை நடத்திய கர்நாடகா மாநிலத்தில் அரசுக்கு ரூபாய்.5 கோடியை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்” எனத் தீர்ப்பளித்தார். இந்த நிலையில்,  ஜெயலலிதாவின் இரண்டாம் தரப்பு வாரிசான அவரது அண்ணன் காலம்சென்ற ஜெயக்குமார் மகள் தீபா, தனது அத்தையின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் 2025 ஜனவரி மாதம் 13-ஆம் தேதி தள்ளுபடி செய்ததையடுத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், சொத்துகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றன. தமிழ்நாடு உள்துறை இணைச் செயலாளர் ஹனி மேரி, தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின்  கண்காணிப்பாளர் விமலா ஆகியோர் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் குழுவினர் ஆவணங்களில் உள்ளவாறு சரிபார்த்து அதைப் பெற்றுக் கொண்டனர்.



இதனை 12 பெரிய அளவிலான ட்ரங்க் பெட்டிகளிலும், 16 சூட்கேஸ்களிலும் வைத்து அலுவலர்கள் தனி வாகனத்தில் ஏற்றினர். பின்னர் 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய காவலர்களின் ன் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு சென்றனர். தவிர பெங்களூரு காவல்துறை கர்நாடக எல்லை வரை நகைகளுக்கு பாதுகாப்பு வழங்கினர்.சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதலான 

ஜெ.ஜெயலலிதாவின் நகைகள், மற்றும் சொத்துக்கள் ரூபாய்.59,870 மற்றும் ரூ.1,60,514 மதிப்புள்ள பழைய 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளும் கருவூலப் பெட்டிகளில் கொண்டு வரப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதால், இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி, செல்லுபடியாகும் பணத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளது.



2023 ஆம் ஆண்டு நிலவரப்படி ரூபாய்.10.18 கோடி மதிப்புள்ள நிலையான வைப்பு ரசீதுகளும் காவலில் வைக்கப்பட்டுள்ளன. வங்கிகள் இந்தத் தொகையை தமிழ்நாடு கருவூலத்தில் டெபாசிட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் , திருவாரூர், தூத்துக்குடி பகுதிகளில் 1526.16 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஆறு நிறுவனங்களின் பெயரிலுள்ள சொத்துக்கள் பறிமுதல் சம்பந்தப்பட்ட மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, அதை ஏலம் விடுவதற்குப் பதிலாக பொது நோக்கங்களுக்காகப் பயன்படுத்த தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது சிறப்பு புலனாய்வுக் குழுவின் காவலிலுள்ள ஒரு சொகுசுப் பேருந்து, நீதிமன்றத்தின் உத்தரவுகளின் படி ஏலம் விடப்பட்டு, அதில் கிடைக்கும் தொகை தமிழ்நாடு அரசு கருவூலத்தில் டெபாசிட் செய்யப்படும்.

2 மற்றும் 3 ஆகிய குற்றவாளிகள் செலுத்திய ரூபாய்.20 கோடி அபராதத்தில், வழக்கை நடத்துவதற்கும் அவர்களின் சட்டச் செலவுகளை ஈடுசெய்வதற்கும் ரூபாய்.13 கோடியை கர்நாடக அரசுக்கு மாற்றுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...