பிரதமர் நரேந்திர மோடி 75 வயதை நிறைவு செய்யும் நிலையில் விரைவில் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என சிவ சேனா (உத்தவ் தாக்கரே) கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தகவல்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வாகி இன்னும் ஓராண்டு காலம் நிறைவடைவதற்குள் அவர் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அடுத்த பிரதமர் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.இந்தத் தகவலை மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும் சிவ சேனா கட்சியின் உத்தவ் தாக்கரே அணியின் முக்கியத் தலைவருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.மும்பையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தவர்,
“பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்று. தனது ஓய்வை அவர் அறிவித்துள்ளார். எனக்குத் தெரிந்தவரை அவர் கடந்த 10 முதல் 11 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்துக்கு எப்போதுமே சென்றதில்லை. நாட்டின் பிரதமரை மாற்ற ஆர்.எஸ்.எஸ். தலைமை விரும்புகிறது. எனவே அவர் தனது பதவியை விட்டு விலக உள்ளார்” எனத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அடுத்த பிரதமராக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி பெயரை ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகம் பாஜகவுக்குத் தெரிவிக்குமென்றும் அவரே அடுத்த பிரதமாகப் பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை 75 வயதுக்கு பின்னர் அரசுப் பதவிகளில் தொடரக் கூடாது எனும் விதிமுறை உள்ளது. நரேந்திர மோடிக்கு வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியுடன் 75 ஆண்டுகள் வயது நிறைவு பெறுகிறது.
அதற்கு முன் அவர் பதவி விலகி பின்னர்
புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிறார்கள்.
இந்த பேச்சு மக்களவைத் தேர்தல் சமயத்திலேயே எழுந்த போதும். நரேந்திர மோடி 75 வயதை நெருங்கி வந்ததால் பிரதமர் வேட்பாளராக வேறு யாரேனும் அறிவிக்கப்படுவார்களா எனும் கேள்வி எழுந்தது. ஆனால் புதிதாக ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு அதிக காலமெடுக்கும் எனவே அனைவருக்கும் நன்கு அறிமுகமான நரேந்திர மோடியை முன்னிறுத்தியே தேர்தலை எதிர்கொண்டுவிட்டு பின்னர் மாற்றிக்கொள்ளலாம் என ஆர்.எஸ்.எஸ். தலைமை முடிவெடுத்ததாக அப்போதே அரசியல் விமர்சகர்கள் கூறினர்.
இந்தச் சூழலில் சஞ்சய் ராவத் இன்று பிரதமர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு சென்றார் என்றும் விரைவில் ஓய்வு பெறுவார் என்றும் கூறியுள்ளார்.
பாஜகவின் நிர்வாக அமைப்பு ஆர்.எஸ்.எஸ் மிகவும் அதிகாரம் மிக்கது ஆர்.எஸ்.எஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடியை விட நெருங்கிய தொடர்பிலிருப்பவர் நிதின் கட்கரி. இதனால் இருவருக்குமிடையே சுமுகமான பேச்சுவார்த்தை இல்லை என்றும் கூடப் பேசப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்