சிந்து ஒப்பந்தம் ரத்து பதிலுக்கு சிம்லா ஒப்பந்தம் ரத்து சிந்து நதி ஒப்பந்தம் ரத்து - பாகிஸ்தானின் மின்சார உற்பத்தி, விவசாயம், குடிநீர் அனைத்தும் பாதிக்கும். பொருளாதார பின்னடைவை அந்நாடு மேலும் சந்திக்கும். பணவீக்கம் அதிகரிக்கும். மனிதாபிமானமற்ற மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் இருளில் மூழ்கும். வறுமையில் வாடும்.
இது ஒரு முடிவின் துவக்கம் .
ஜம்மு காஷ்மீர் சுற்றுலாப் பயணிகள் மீது ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பஹல்காம் பகுதியில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்ட நிலையில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலில் ஆண்கள் மட்டும் குறிவைக்கப்பட்டதாகவும், இந்துவா? முஸ்லிமா? என்று மதத்தைக் கேட்டு தாக்குதல் நடத்தியதாகவும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் வாயிலாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியாகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியாவில் மட்டுமல்லாது பல நாட்டுத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல் வந்தது.
இதற்கிடையே, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டதில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையை மூடுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும், இந்தியாவிற்கு வர பாகிஸ்தான் நாட்டினருக்கு அனுமதி இல்லை எனவும், பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எஸ்விஇஎஸ்(SVES) விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும்,
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே மாதம் 1 ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையில் 1960 ஆம் ஆண்டில் கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பது என முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்தியாவின் அதிரடி முடிவுகளால்
பாகிஸ்தானுக்குச் செல்லக் கூடிய சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் எனும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாக்லிகார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்கு நதிநீர் சென்று வந்தது. இந்த சூழ்நிலையில், ராம்பன் அணையின் மதுகுகளை மூடி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை நிறுத்தி வைப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் வாழும் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக அமைந்திருக்கும் சிந்து நதிநீர் தற்போது இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. சிந்து நதிநீரை நிறுத்தி வைத்த இந்தியாவின் இந்த முடிவு சட்டவிரோத நடவடிக்கை என்றும் இதன் மூலம் இந்தியா நீர் போர் நடத்துகிறது என்றும் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்தியா உடனனான சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தி வைத்த பின்பு, பாகிஸ்தான் வான்வெளியை இந்தியா பயன்படுத்தத் தடை உள்ளிட்ட பல அறிவிப்புகளை தேசியப் பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு பிறகு அறிவித்து வரும் பாகிஸ்தான், தற்போது இந்தியா உடனான சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போருக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மீட்டெடுப்பதற்கும், அமைதியை நிலைநாட்டுவதற்கும் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் பாகிஸ்தான் அதிபர் சுல்ஃபிகார் அலி பூட்டோ ஆகியோரால் 1972 ஆம் ஆண்டில் ‘சிம்லா ஒப்பந்தம்’ போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரின் முடிவை கணக்கிட்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருக்கக் கூடிய சுமார் 13,000 கி.மீ அளவிலான பரப்பளவை இந்தியாவிற்கு ஒதுக்கப்படும் என்றும், இரு நாடுகளின் எல்லைகளை தீர்மானிப்பதற்கு அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்க வேண்டும் என்றும், உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடு தலையிடக் கூடாது என்றும் குறிப்பிட்ட. இந்த ஒப்பந்தத்தை தற்போது பாகிஸ்தான் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலம் இருநாடுகளின் எல்லை தொடர்பான எந்தவித பேச்சுவார்த்தைக்கும் உடன்படிய மாட்டோம் என பாகிஸ்தான் மறைமுகமாக செய்தி சொல்வதாகக் தெரிகிறது. பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவின் எடுத்த அதிரடி நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் அறிவிப்பால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் நிலவுகிறது.
பந்திப்போராவில் OGW எனப்படும் தீவிரவாதிகளுக்கு களத்தில் இருந்து உதவும் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின் போது முகமது ரபீக் கண்டே மற்றும் முக்தார் அகமது தார் என அடையாளம் காணப்பட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திங் தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அமினுல் இஸ்லாம், நாகான் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். (பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானையும் அதன் உடந்தையையும் ஆதரித்ததாகக் கூறி, அசாமின் எதிர்க்கட்சியான AIUDF எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் வியாழக்கிழமை தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
கருத்துகள்