யு டியூபில் வந்த விளம்பரத்தை பார்த்து புடவையை ஆர்டர் செய்த, கர்நாடகாவைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ். பெண் அலுவலர், ஏமாந்தார்.
கர்நாடகா மாநில அரசில், பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவான, 'சகலா மிஷன்' இயக்குநரும், ஐ.ஏ.எஸ்., உயர் அலுவலருமான பல்லவி அக்ருதி, (வயது 42), மார்ச் மாதம் மாதம் 10 ஆம் தேதி, யு டியூபில் புடவை விற்பனை குறித்த விளம்பரக் காணொளி ஒன்றை பார்த்து அந்த வீடியோவில், மதுரையில் கைத்தறியில் நெய்யப்பட்ட தரமான காட்டன் புடவைகள், குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக அந்த விளம்பரத்தில் கூறப்பட்ட நிலையில் வீடியோவில், பல புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.அதில், தங்களுக்கு விருப்பமான புடவையின் புகைப்படத்தை, 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து, 'வாட்ஸாப்' எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பின், யு.பி.ஐ., செயலி வாயிலாக, 850 ரூபாய் செலுத்தவும் என கூறப்பட்டிருந்ததன்படி,
பல்லவி அக்ருதி, 850 ரூபாயை செலுத்தினார். தனது வீட்டின் முகவரியையும் குறிப்பிட்டு அனுப்பினார். ஆனால், ஆர்டர் செய்து பல நாட்களைக் கடந்தும், புடவை வரவில்லை. இதனால், குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அந்த தொலைபேசி மூலம் எந்தவிதமான பதிலும் வரவில்லை.தான் ஏமாற்றப்பட்டதை, உணர்ந்த பின்னர் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி பெங்களூரு கிழக்கு மத்தியக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் செய்த புகாரில், 'பூர்ணிமா கலெக் ஷன்ஸ் என்ற யு டியூப் சேனலில் வந்த வீடியோவை பார்த்து, 850 ரூபாய் செலுத்தி, புடவையை ஆர்டர் செய்தேன். ஆனால், புடவை வரவில்லை. நான் இழந்த தொகை சிறிது தான். ஆனால், என்னைப் போன்று பலரும் ஏமாற்றப்பட்டு இருக்கலாம். இதனால், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு மிகப்பெரிய தொகை கிடைத்திருக்கும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. இது குறித்து, தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் (பி.என்.எஸ்.) பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 318 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
கருத்துகள்