ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்.எல்.பி வழங்கும் *ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..
பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது, 'மையல்' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில் முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில் கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார்.
"எமோஷனல் டிராமாவாக உருவான முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். 'மையல்' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார்.
நடிக்க வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித்தி. மாத்ருபூமி, மிஸ் க்ரிஹலக்ஷ்மி, ஃபேஸ் கேரளா 2019 மற்றும் ஸ்டார் மிஸ் ஃபேஸ் ஆஃப் இந்தியா-2021 ஆகிய பட்டங்களை வென்றவர். பிரதி பூவன்கோழி-2019, சுமேஷ் மற்றும் ரமேஷ் -2021, கைபோல 2023 மற்றும் அவரது வரவிருக்கும் வெளியீடான பரன்னு பரன்னு பரன்னு செல்லன் இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
இத் திரைப்படம் ரொமாண்டிக் திரில்லர் படமாக பாதிக்கப்பட்டவரின் கொந்தளிப்பான மனநிலையை மையக்கதையாகக் கொண்டதிந்தப் படம் என்கிறார் திரைத் துறையில் நல்ல பல அனுபவங்கள் பெற்ற இயக்குநர் ஏபிஜி ஏழுமலை. இவர் கண்ணும் கண்ணும், லாடம், மைனா, கும்கி.திரைப்படங்களில் இயக்குனர் பிரபுசாலமனின் இணை இயக்குநராகவும், இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகவும் இருந்து பணி செய்த அனுபவம் உள்ளவர்
ஆர். வேணுகோபால்-அனுபமா விக்ரம் சிங், தயாரிக்க ஜெய மோகன் கதை,திரைக்கதை,உரையாடல் எழுதிய நிலையில் சிறப்பாக இயக்கிய இயக்குனர் ஏபிஜி ஏழுமலை, நமது நாட்டின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைப்பிலுள்ள குறைபாடுகள் குறித்து மையல் கதை மூலம் எழுத்தாளர் விவரிக்கும் நிலையில் இயல்பான முறையில் படமாக்கிய இயக்குனர் ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில்,"மைனா படத்தில் நடித்த சேது. மையலில் ஒரு சிறிய திருடனாக நடிக்கிறார்," என இயக்குனர் ஏபிஜி ஏழுமலை பப்ளிக் ஜஸ்டிஸ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
சம்ரிதி தாராவின் கதாபாத்திரத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில் சம்ரிதி தாரா ஒரு சிறிய நகரத்துப் பெண்ணாக ஒரு தனிமையான வாழ்க்கை வாழ்கிறார். அவரது வாழ்நாள் முழுவதும், அவரது பாட்டி மற்றும் அவரது வளர்ப்பு எருமைகளுடன் மட்டுமே அவர் தொடர்புள்ள ஒரு கதாபாத்திரம் கொண்டார். அவர் ஒரு சமூகத்தில் வாழ்வியல் படி வாழவில்லை, பிறரால் நேசிக்கப்படுவது எப்படி என அவருக்குத் தெரியாது. அவரது பாட்டியின் கதாபாத்திரம் மூலம் பில்லி சூனியம் பற்றிய நுண்ணறிவையும் படம் விவரிக்கும் . இருப்பினும், சேதுவின் கதாபாத்திரம் மூலம் அவரது காதல் நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டின் நீதித்துறை அவர்களின் காதலில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்துவதால் கதையில் ஒரு திருப்பமுள்ளது. அது நன்மைக்காகவா அல்லது தீமைக்காகவா என்பது தான் மையல் திரைப் படத்தின் மையக்கரு."
இத் திரைப்படம் 37 நாட்களில் மட்டுமே வீன் செலவுகளின்றி தேவையான காட்சிகள் படமாக்கப்பட்டதாக இயக்குனர் ஏபிஜி.ஏழுமலை குறிப்பிட்டார். "கதைக்களம் திருவண்ணாமலையில் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கிறது, மாவட்டத்திலுள்ள பல கிராமங்களில் படமாக்கியுள்ளனர். சில ஆண்டு காலமாக தமிழ் திரைப்படங்கள் இப்படி பல நம்பிக்கை தரும் படங்களையும் இயக்குனர் போல திறமைசாலிகளையும் ஆதரித்து வரவேற்கிறது. மைனாவில் ‘பாஸ்கர்’ கதாபாத்திரத்தில் நடித்து பரவலான பாராட்டுகளைப் பெற்ற நடிகர் சேது. இப்போது முக்கியமான சமூகப் பிரச்சினையை எடுத்துரைக்கும் ‘மையல்’ என்ற ஆழமான உணர்வுப்பூர்வமான படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அவரை இயக்குனர் சிறப்பாக நடிக்க வைத்துள்ளார்.
மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழில் ‘மையல்’ படத்தில் மாற்று மொழியில் அற்புதமாக அறிமுகமாகிறார். ‘மையல்’ படததின் . நடிகர்களுடன் பி.எல். தேனப்பன் மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் ,நடிகர்கள் வெங்கையா பாலன்,சி. எம். பாலா, இரத்தின கலா,காரைக்குடி ரெங்கநாதன் உள்ளிட்ட பலரும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பதை விட இயக்குனர் கதாபாத்திரமாக வாழ வைத்துள்ளார் எனலாம்.
திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள சங்கராபுரம் கல்வராயன் மலையின் அழகிய இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முழுத் திரைப்படமும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் 37 நாட்களில் நிறைவடைந்துள்ளது.
ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி, சார்பில் ஆர் வேணுகோபால்-அனுபமா விக்ரம் சிங், தயாரிக்க, ஜெய மோகன் கதை உரையாடல் எழுத இயக்கியுள்ளார் ஏபிஜி ஏழுமலை, அமர்கீத் இசையில் பாடல்கள் கேட்கலாம்.
பாலா பழனியப்பன் ஒளிப்பதிவில் மலை வாழிடம் நேரில் பார்ப்பது போல காட்சிப்படுத்தியுள்ளார் : இக் கதை களத்தில் பாலா எடிட்டர் காட்சிகள் சலிப்பு இல்லா நிலையில் படம் வெற்றிக்களமாக இயக்குனர் முயற்சியில் அமைந்துள்ளது. விரைவில் வெனித்திரையில் இயக்குனருக்கு ஒரு வெற்றிப்படமாக வண்ணக் காவியமாக 'மையல்' மையம் கொள்ளும்.
கருத்துகள்